Saturday, January 28, 2012

PERSONAL WORSHIP-#1

நேரடி வழிபாடு
ஐயம் தெளிதல்

2003-ஆம் ஆண்டில் தனிப்பட்ட முறையில் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்விகள் பல. 
அவற்றிற்கு ஏற்ற பதில்களை நானும் தனிப்பட எழுதியனுப்பினேன்.
பார்க்கும்போது அவை எல்லாருக்குமே பொருந்தும், பயன்படும் என்று நிச்சயமாகத் 
தோன்றுவதால் அவற்றில் இரண்டு மடல்களில் கண்டுள்ள சாராம்சத்தை இங்கே இட்டிருக்கிறேன். 
இது முதல் மடல்.....

>>>>>>>>>>>>
  கிரகங்களின் விஷேச கூட்டமைப்புக் கொண்ட நாட்களில் சிறப்பு வழிபாடு செய்யலாம். 
ஆனாலும் பொதுவாக எந்த நேரத்திலும் வழிபாடு செய்யலாம். அதில் சில நேரங்களில் 
செய்வது இன்னும் ஆற்றல்வாய்ந்த வழிபாடாக இருக்கும். மந்திர வழிபாட்டில் இது முக்கியமாகக் கருதப்பட்டிருக்கிறது.
உங்களுக்கென்று  சொந்த வழிபாட்டுக்குத் தேவாரப் பாடல்களைத் 
தேர்ந்தெடுக்கலாம்.
கந்தர் ஷஷ்டி கவசத்துக்கு மிகுந்த ஆற்றல் இருக்கிறது. காரியசித்தி மாலைக்கும் சில 
பிரயோக முறைகள் இருக்கின்றன.

தேவாரங்களில் சில வகைகள் உண்டு. 
சரணாகதி தேவாரம்.
இறைவனை வழுத்தும் தேவாரம்
வரம் கேட்கும் தேவாரம்
துயர்தீர்க்கும் தேவாரம் 
இறைவனுடன் நேரடியாகப் பேசும் தேவாரம் 
பயம் தீர்க்கும் தேவாரம்
கோபம் தீர்க்கும் தேவாரம்
பாவம் தீர்க்கும் தேவாரம்
பழிதீர்க்கும் தேவாரம்
தோஷம் தீர்க்கும் தேவாரம்
பகைவெல்லும் தேவாரம்
பகைதீர்க்கும் தேவாரம்

இப்படி இருக்கின்றன. 

பணம் வேண்டுமானால் இடரினும் தளரினும் படிப்பார்கள். நெடுங்களத் திருப்பதிகம் 
இடர்தீர்க்கும் தேவாரம். 
அர்ச்சனைக்குரிய தேவாரம் - போற்றித் திருத்தாண்டகம்.

நேரடி வழிபாடு என்னும் மடலின் இரண்டாம் பாகம் இது.  கேள்வி பதிலாக அமைந்துள்ளது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Date: Thu, 01 May 2003 18:58:26 +0000
From: jaybee <jaybee@tm.net.my>

At 09:19 AM 4/30/2003 -0700, you wrote:
>
கேள்வி: சரணாகதி தேவாரம் எவையெவை? 

பதில்: நான் எழுதியிருக்கும் நான்கும் சரணாகதி வகையைச் சேர்ந்தவைதாம். 'ப்ரபத்தி' என்றும் சொல்வார்கள். இதே போன்றவை நிறைய இருக்கின்றன.

கேள்வி: அதே போல இறைவனுடன் நேரடியாகப் பேசும் தேவாரம் எவை? 

பதில்: இந்த வகையிலும் பல இருக்கின்றன. அப்பருடைய தேவாரங்களில் பலவற்றில் அவர் நேரடியாக இறைவனுடன் பேசுவதைக் காணலாம். 

கேள்வி: ஆனால் இறைவனுடன் நேரடியாகப்பேசும் தேவாரம் பாடுவதற்கு எனக்கு தகுதி இருக்கிறதா? 

பதில்: இறைவனுடன் நேரடியாக எல்லாருமே பேசவேண்டும் என்பதால்தான் அந்தப் பாடல்களை அப்பர் போன்றவர்கள் பாடியிருக்கிறார்கள். பாடவேண்டும் என்று நினைக்கும்போதே அந்தத் தகுதி ஏற்பட்டுவிடுகிறது. 

"Our Father which art in Heaven
Hallowed be Thy Name"....

என்னும் பொழுது இறைவனுடன் நேரடியாகப் பேசவில்லையா? 
'Sermon of Mount' என்னும் மலைப் பிரசங்கத்தின்போது ஓர் ஆள், ஏசு பெருமானிடம் 'எப்படி இறைவனைத் தொழுவது?' என்று கேட்டதற்கு அவர் இந்த 'Lord's Paryer'-ஐச் சொல்லிக் 
கொடுப்பார். 'தம்பிரான் வணக்கம்' என்று தமிழில் சொல்வார்கள்.

Doa Selamat போன்ற பிரார்த்தனைகள் இறைவனிடம் நேரடியாகப் பேசுவதாய் அமைந்தவைதாம். 

கேள்வி: >எதாவது ஆச்சாரங்களை நான் கடைப்பிடிக்க வேண்டுமா?

பதில்: மனதில் நினைப்பதே ஒரு நல்லாசாரம்தான். அதைவிட ஆசாரம் என்ன இருக்கப்போகிறது? 
அப்பர் தேவாரத்திலுள்ள 'காயமே கோயிலாக' போன்ற பாடல்கள் மனதிலேயே இறைவனை 
ஆவாஹணம் செய்து ஆத்மார்த்தமாக வழிபாடு செய்வதைக் குறிப்பவைதாம்.  

திருமூலர் சொல்லியிருப்பதைப் பாருங்கள்:

உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் 
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் 
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே
தெள்ளத்தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்

வேதத்தின் சாரமெல்லாம் என்ன?

சத்யம் வச: தர்மம் சர! 

சத்தியத்தைப்பேசு; தர்மத்தில் நட!

அதுதான் ஆசாரம் அனுஷ்டானமெல்லாம்:-)
>
கேள்வி: கந்த சஷ்டி கவசம் சொல்லுவதற்கு என்ன வெல்லாம் செய்ய வேண்டும். 

பதில்: முருகனை நினைத்துக்கொண்டு ஷடாட்சரத்தைச் சொல்லிக்கொண்டு பாராயணம் பண்ண வேண்டியதுதான். 
செவ்வாய்க்கிழமை மாலை, வள்ளிதெய்வயானையுடன் ஆறுமுகம் பன்னிருகையுடன் மயில்மீது வீற்றிருக்கும் படத்தை வைத்து வழிபடலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் தேன் வைத்து, மலர்கள் போட்டு, கவச பாராயணம் செய்யலாம். இது ஒரு சுலபமான வழிபாடு. 

இதுவும் அதற்குரிய படம்தான் - 

என்னுடைய ·பேஸ்புக்கில் அந்தப் படம் உண்டு.

கேள்வி: >அதே போல காரிய சித்தி >மாலையை பாடுவதென்றால் என்ன செய்ய வேண்டும். என்ன மாதிரியான முறைகளை செய்ய வேண்டும்.

பதில்: ஏதாவது காரியம் ஆகவேண்டுமானால் எட்டு நாளைக்கு மூன்று வேளை படிக்கவேண்டும். 
சதுர்த்தியன்று எட்டுமுறை படிக்கலாம். இதுவும் பலன் பெறவேண்டி, செய்யும்முறைதான்.
சும்மாவும் படிக்கலாம். 
>கேள்வி: கடவுளிடம், அதைத்தா, இதை செய் என்று கேட்பது நல்லதா என்று தெரியவில்லை. 

பதில்: அதற்கும் வழிகாட்டியிருக்கிறார்கள்.

"Give us this day, our daily bread"
"Ask and it shall be given unto you"

"இடரினும் தளரினும் எனதுறுநோய் 
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை 
மிடறினில் அடக்கிய வேதியனே!
இதுவோ எமை ஆளுமாறு,
ஈவதொன்று எமக்கில்லையேல்?
அதுவோ உனது இன்னருள்,
ஆவடுதுறை அரனே?"

-திருஞானசம்பந்தர்

கேள்வி: >கூடவே, எனக்கு எதெல்லாம் நல்லது என்று தெரியாது. நல்லதை செய்யும் பொறுப்பை அவரிடமே விட்டு விடலாம் என்று நினைக்கிறேன். :) 

பதில்: அதுவும் நல்லதுதான்.

மாணிக்கவாசகர் சொல்வது போல்:

அன்றே என்றன் ஆவியுடன் உடலும் உடமை எல்லாமும் 
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ 
இன்றோர் இடையூறு எனக்குண்டோ? எண்டோள் முக்கண் எம்மானே!
நன்றே பிழை செய்வாய்! நானோ இதற்கு நாயகமே?

>கேள்வி: அதனால்தான், கோவிலில் கடவுளை வணங்கி வேண்டுதல் விடுப்பது சரிதானா? Is it advisable என்ற கேள்விகள் எழுகின்றன.

பதில்: கேட்கவேண்டியதைக் கேட்டும் பெறலாம். 

அம்பாளிடம் பரிபூரண சரணாகதி அடைந்துவிட்ட அபிராமி பட்டர், 'கலையாத கல்வியும் குலையாத செல்வமும் கபடு வராத நட்பும்' என்று பதினாறு பேற்றையும் பட்டியலிட்டுக் கேட்கிறார்:-)
அவர்களே பாதையையும் போட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
ஆங்லெய், ஆங்கிலம், எங்லிஷ், இங்கிலீஷ்

        ·பேஸ்புக்கில் இங்கிலீஷ் என்று நான் எழுதியதற்கு ஓர் ஆசாமி "ஆங்கிலம்' என்ற தமிழ்ச்சொல் இருப்பதை அறியமாட்டீர்களா" என்ற மாதிரியாகச் சொல்லியிருந்தான்.
அதிகம் பிடித்த இங்கிதம் தெரியாத பசங்களை 'அவர் இவர்' என்று சொல்லிக்கொண்டு பணிவதால்தான் அந்தப் பசங்களுக்குக் கொழுப்பும் திமிரும் கூடிவிடுகிறது.
இண்டர்நெட்டில் இந்தத் திமிர் இன்னும் பன்மடங்கு கூடுதலாக இருக்கும். 
'எங்லிஷ்' என்று இங்கிலாந்தியரால் உச்சரிக்கப்பட்ட பெயரை 'இங்கிலீஷ்', 'இங்கிலீசில்' என்று Tamilise செய்து சொல்வதில் என்ன தவறு? இதைப் போய் அன்னியச்சொல் என்ற மாயையை ஏற்படுத்தி யிருக்கிறார்கள்.
இங்கிலீசு ஓர் அன்னியச் சொல்லாக இருப்பின் ஆங்கிலமும் அன்னியச் சொல்தான்.
இது ஒரு ·பிரெஞ்சு மொழிச் சொல்லை மூலமாகக் கொண்டது. Anglaise என்னும் சொல். 
இந்தியாவுக்கு கடந்த ஐந்நூறு ஆண்டுகளில் வரப்போக இருந்த முக்கிய இனத்தவரின் மொழிகளில் அவர்கள் இங்கிலீஸை எப்படி அழைத்திருக்கிறார்கள்?

Ingles என்று போர்த்துகீசியர் சொல்வார்கள்.
Engels என்று டச்சுக்காரர்கள் சொல்வார்கள்
English என்று டேனிஷ்காரர்கள் சொல்வார்கள்
Ingilizce - துருக்கியர்
Inglese என்று இத்தாலியர்கள்.
இங்லீஸ் என்று பெர்சியரும் அராபியரும்.


Anglais ஆங்லெய் என்று ·பிரெஞ்சுக்காரர்கள் அழைத்தனர். 
அதிலிருந்துதான் ஆங்கிலேயர், ஆங்கிலம் என்ற பெயர் ஏற்பட்டது. உச்சரிப்பும் ஒத்துவரும்.


Anglo என்னும் சொல் ஒன்று இருக்கிறது. ஆனால் இது ஒரு பெயராக இருக்கவில்லை. Anglo-Indian போன்ற கூட்டுச் சொல்லில் வழங்கியது.  
இந்த மாதிரியான மாயைகள் பல இருக்கின்றன.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


Monday, January 23, 2012

THEVARAM HYMNS II

THEVARAM HYMNS
DISCOVERY OF THEVARAM HYMNS BY RAJARAJA CHOLZA THE GREAT
(PART II)

This article was written in 1985 on the occassion of the 1000th year anniversary of the coronation of RajaRaja Cholza the Great as the Cholza Emperor in 985 AD




This is the copy of the original manuscript.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

THEVARAM HYMNS

DISCOVERY OF THEVARAM HYMNS BY RAJARAJA CHOLZA THE GREAT
(PART I)
This article was written in 1985 on the occassion of the 1000th year anniversary of the coronation of RajaRaja Cholza the Great as the Cholza Emperor in 985 AD

This is the copy of the original manuscript.





GO TO PART II

Saturday, January 21, 2012

Thai Amavasai

FROM AGATHIYAR: 220112


அன்பர்களே,


தை அமாவாசை ஒரு முக்கியமான நாள்.
தர்ப்பணம் போன்றவை, வழிபாடுகள் தவிர இன்னும் சில விசேஷங்களும் அதற்கு உண்டு.
உபாசனை, மந்திர சாஸ்திரப் பிரயோகம், சாதகம், மந்திர உபதேசம், அஷ்ட கர்மா போன்றவற்றிற்கு ஏற்ற நாள்.
குறிப்பாக மந்திர உபதேசத்தை தை அமாவாசைக்காகக் காத்திருந்து, அன்று செய்வார்கள்.
செய்வதற்கும் உரிய நேரத்தை மிகவும் துல்லிதமாகக் கணித்து அந்த நேரத்தில்தான் செய்வார்கள்.
தை அமாவாசையில் உள்ள சில நேரங்கள் ரொம்பவும் விசேஷமானவை.
ஆனால் அந்தக் கணிப்புதான் மிகவும் சிக்கலானது.
ஒன்றரை மணி நேரம், பதின்மூன்றரை நிமிடம், நான்கு நிமிடம், ஒரு கணம் என்று அந்த நேரங்கள் அமைந்திருக்கும்.
இவற்றிலும் பலவகையான Combinations உண்டு.
நோக்கு வர்மம், Hypnotism, Telepathic Thought Blow போன்றவற்றின் பிரயோகங்கள் இந்த மாதிரி நேரங்களில் செய்வது அதீத பலனைக் கொடுக்கும். அபரிமிதம் என்றொரு சொல் இருக்கிறது. அந்த பலனையும் கொடுக்கும்.
மனதில் பொதிந்துள்ள ஆற்றல்களை அதிகரிக்கச் செய்ய சாதகங்கள் செய்யும் நாள்.
மந்திர நூல்களையோ அதிநுட்பக்கலைகளையோ மனனம் செய்வது, படிப்பது போன்றவற்றிற்கு ஏற்ற நாள்.
தியானம் செய்து மனதை ஒடுங்கச்செய்வது பெரும்பலனைக் கொடுப்பதாக அறிவார்ந்த சான்றோர் சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட கிழமையில் இந்த திதி அமைவது அளவு கடந்த விசேஷம் கொண்டது என்றும் அந்தச் சான்றோர் சொல்லியிருக்கிறார்கள்.

"இதென்ன.... விஷயங்களை உடைத்து எழுதாமல் பூடகமாக எழுதுகிறாரே..... இவையெல்லாம் அழிந்துபோய்விடமாட்டாதா?" என்று சிலர் யோசிக்கக்கூடும்.
அவற்றையெல்லாம் நீங்கள் சுலபமாக அறிந்துகொள்வதற்கு உங்களுக்கு லிவிதமும் கொடுப்பினையும் இருக்கிறதா என்பது பெரிய கேள்விக் குறியல்லவா?


எல்லெஸ் கோட்பாடு இதற்கெல்லாம் ஒத்துவராது.
எல்லெஸ் கோட்பாடு?
LosAngels Swaminathan Principle.
அவர்தான் அடிக்கடி சொல்வார், "எழுதி வலையில் எங்காவது போட்டு வையுங்கள். யாராவது பார்ப்பார்கள்".
இதையெல்லாம் ஏன் எழுதுகிறேன் என்றால், 'இப்படிப்பட்ட விஷயங்களும் இருக்கின்றன', என்பதைத் தெரிவிப்பதற்குத்தான்.
இதில் ஈடுபாடு கொண்டோர் தேட ஆரம்பிப்பார்கள். சிரத்தை எடுத்து சிரமப்பட்டு கற்றுக் கொள்ள முற்படுவார்கள்.
இந்த மாதிரி அதிநுட்பக் கலைகளைக் கற்றுக்கொடுப்பதற்குக்கூட லட்சணம் பார்ப்பார்கள்.
குறிப்பாக - கண்களின் ரேகை, நெற்றி ரேகை, கை ரேகை, பெருவிரல் ரேகை, ஜனன ஜாதகம் போன்றவை.
பார்த்தீர்களா.....?
நிறைய ·பில்ட்டர் போட்டு வைத்திருக்கிறார்கள்.


அன்புடன்


ஜெயபாரதி