Tuesday, December 10, 2013

rajaraja


ராஜராஜ சோழரின் மின்னல் போர்முறை


இராஜராஜ சோழர்




 தஞ்சை பெரிய கோயில்


காந்தளூர்ச்சாலைப் போர்

Tuesday, November 12, 2013

NOSTRADAMUS PREDICTIONS


PREDICTIONS OF NOSTRADMUS

EMPEROR NAPOLEON OF FRANCE



NAPOLEON'S RETREAT FROM RUSSIA



GUILLOTINE 


ADOLF HITLER



SWASTIKA - CROOKED CROSS

LONDON UNDERGROUND


LUFTWAFFE


NUCLEAR EXPLOSION





STATUE OF LIBERTY

Tuesday, October 15, 2013

NOSTRADAMUS


FOR MR.ANBUCHELVAN

NOSTRADAMUS 

PICTURES


NOSTRADAMUS


  CADUCEUS



IMHOTEB 



NOSTRADAMUS WANDERER




NOSTRADAMUS RESEARCH



BOOK




GALILEO INQUISITION

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Monday, July 8, 2013

காசு, பணம் துட்டு....



காசு 
முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியர் காசு 
இதை ஆனை அச்சு என்றும் அழைத்தார்கள்
கிபி 1251 - 1293



பணம்

ஆங்கிலேயர் ஆட்சியில் புழங்கிய ஒரு பணம் என்னும் அரைக்கால் ரூபாய்


துட்டு

ஆங்கிலேயர் ஆட்சியில் புழங்கிய முக்கால் துட்டு, அரைத் துட்டு, 
கால் துட்டு நாணயங்கள்.
முக்கால் துட்டு என்பது காலணா
கால் துட்டு என்பது தம்பிடி அல்லது சல்லி

கீழே இவற்றிற்கான விளக்கம் கொண்ட அகத்தியர் குழு மடல்!

"காசு, பணம், துட்டு, Money, Money......"
இவற்றில் காசு, பணம், துட்டு ஆகியவை இப்போது பணம் என்ற பொருளைப் பொதுவாகக் குறிக்கும் சொல்லாக இருக்கின்றன. 
ஆனால் இவை மூன்றுமே வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ் நாட்டில் 
வழங்கிய, குறிப்பிட்ட மதிப்புக்கொண்ட currency நாணயங்களாக இருந்தவை. 
இவற்றில் 'காசு' என்பது மிகவும் பழைமையானது. ஒரு கால கட்டத்தில் இது பொன்னால் ஆகிய நாணயமாக விளங்கியது. 
பாண்டியர்கள் காலத்தில் ஒரு பொற்காசுவுக்கு 12000 வெற்றிலைகள் 
வாங்கலாம்.
பிற்காலத்தில் காசு என்பது ஒரு செப்பு நாணயமாக விளங்கியது. அப்போது அதன் மதிப்பும் குறைந்துவிட்டது. 
"காக்காசுப் பெறாத விஷயம்" என்ற சொல்வழக்குக்கு இடம் கொடுத்தது. 
கால்க்காசு என்பது மிகச் சிறிய நாணயமாக விளங்கியது.
'பணம்' என்பது பழங்காலத்தில் ஒரு பொன் நாணயமாக இருந்தது. 
பிற்காலத்தில் வெள்ளி நாணயமாக விளங்கியது. 
இது ஒரு வெள்ளி ரூபாயில் எட்டில் ஒரு பங்காக இருந்தது. 
'அணா' நாணயக் கணக்கு புழக்கத்துக்கு வந்தபோது ஒரு சிறிய வெள்ளிக்காசாக விளங்கியது. அது இரண்டு அணா மதிப்புப் பெற்றதாக இருந்தது. அரைக்கால் ரூபாய் என்றும் சொல்வார்கள்.
சிறிய வெள்ளி நாணயம். 
இதற்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. 
சம்பந்தப்புரம், மாமன் மச்சான் முறை கொண்டவர்களைத் திருமணத்துக்கு அழைக்கும்போது ஒரு தாம்பாளத்தில் வெள்ளிப் பணத்துடன் வெற்றிலை பாக்கு வைத்து பத்திரிக்கை வைத்து மரியாதையாக அழைப்புக்கொடுப்பார்கள்.
இதைப் 'பணம் பாக்கு வைத்தல்' என்பார்கள்.
இதை வாங்கியவர்கள் கட்டாயமாக திருமணத்துக்குச் சென்று ஒரு மஞ்சள் துணியில் அதே வெள்ளிப் பணத்தை வைத்து முடிச்சுப்போட்டு அதை மாப்பிள்ளை அல்லது பெண்ணின் மணிக்கட்டில் கட்டி விடுவார்கள். 
இதைக் 'கங்காணம் கட்டுதல்' என்பார்கள்.
இதிலெல்லாம் அந்தக் காலத்தில் ஏதாவது சச்சரவு வந்தது உண்டு.
'துட்டு' என்பது முந்நூறு நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் புழங்க ஆரம்பித்து ஆறாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியின் ஆட்சியின் ஆரம்பகாலம் வரைக்கும் இருந்தது.
அப்போது ரூபாய், அணா, பைசா என்னும் கரென்ஸி இந்தியாவின் அதிகாரபூர்வமான கரென்ஸியாக விளங்கியது. 
அந்த வரிசையில் 'துட்டு' என்பதும் கொஞ்ச காலம் இருந்தது. 
ஓர் அணாவில் மூன்றில் ஒரு பங்கு. அந்த நாணய வரிசையில் மிகச் சிறிய மதிப்புக் கொண்டதாக ஒரு சல்லி, அல்லது தம்பிடி விளங்கியது. பன்னிரண்டு தம்பிடி கொண்டது ஓர் அணா. 192 சல்லி/தம்பிடி கொண்டது ஒரு ரூபாய். ஒரு துட்டுக்கு நான்கு சல்லி. 
காலணாவுக்கு மூன்று சல்லி. காலணா என்பது முக்கால் துட்டுக்குச் சமம். 
ஆகவே காலணாவை 'முக்காத் துட்டு' என்றே பெரும்பாலும் குறிப்பிட்டார்கள்.
"காத்துட்டுக்குப் பிரயோசனமில்லை", "தம்பிடிக்கு ஆகாத வேலை", 
"சல்லித்தனம்", "சல்லிப்பயல்" என்ற சொல்வழக்குகள் எல்லாம் 
இருந்திருக்கின்றன.


                                   $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



Friday, July 5, 2013

CHINESE HAWKER'S TECHNIC


நிர்வாக இயலும் சீனச் சிற்றுண்டிச் சில்லறை ஸ்டாலும்
மலேசியாவின் ஜனத்தொகையில் 35 சதவிகிதம் சீனர்கள். இவர்கள் 
மலாயாவின் எல்லா பாகங்களிலும் சமமாகப் பரவியிருக்கவில்லை. சில இடங்களில் சில ஊர்களில் அதிகமாக இருப்பார்கள். பல இடங்களில் மிகக் குறைவாகவே காணப்படுவார்கள். அவர்கள் இருக்கும் இடங்களில் Food Court என்னும் சாப்பாட்டு மையங்கள் இருக்கும். ஒரு சதுரமான சதுக்கத்தின் ஓரங்களில் பல குட்டிக் குட்டிக் கடைகள். அவை உண்மையிலேயே சக்கரமில்லாத வண்டிகளின் மீது அமைந்தவை. 







அதை ஸ்டால் என்று சொல்லக்கூட முடியாத அளவுக்குச் சிறிய வண்டி. 
அந்த வண்டிக்குக் கூரை இருக்கும். அந்தக் கூரைக்குக் கீழே ஒரு சிறிய கண்ணாடி அலமாரி இருக்கும். அதில் ஒரே ஒரு தட்டுத்தான். அந்த ஸ்டால் காரன் எந்தவிதமான உண்டிகளைத் தயார் செய்கிறானோ, அவற்றிற்கான கச்சாப் பொருட்கள் அதில் இருக்கும். 
வண்டியின் பக்கவாட்டில் ஓர் அடுப்பு. அடுப்புக்குப் பக்கத்தில் கேஸ் டாங்க். அடுப்பின் மீது க்வாலி எனப்படும் பெரிய இருப்பு வாணலி. உண்டியில் சேர்க்கப்படும் சில பொருட்களை அவித்துப் போடவேண்டும். அதற்காகத் 'தள புள தள புள' என்று ஒரு பெரிய அலுமினியப் பானையில் சூப் கொதித்துக் கொண்டிருக்கும். சோயா முளை போன்றவற்றை ஒரு பெரிய வடிகட்டியில் வைத்துக்கொண்டு, அந்தத் 'தளபுள' சூப்பிற்குள் இட்டு எடுப்பான்.
Food-Court-களில் கை கழுவும் இடம் இருக்கும். சில ·பூட்-கோர்ட்டுகளில் 
கழிவறையும் இருக்கும். 
இந்த மாதிரியான சீனச் சிறு சில்லறை வியாபாரிகளை Hawkers என்று அழைப்பார்கள்.



பீஹூன் கோரேங்


மீ கோரேங்


க்வேய்த்தியாவ் கோரேங்
அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான உண்டிகளைத் தயார் செய்து விற்பார்கள். மீ கோரேங் எனப்படும் பாஸ்ட்டா மாதிரிப்பட்ட உண்டியைச் செய்பவன் அதைத்தான் செய்வான். க்வெய்த்தியாவ் செய்பவன் அதைத்தான் செய்வான். 
ஒவ்வொரு ஹாக்கரும் சிலவகை உண்டிகளை மட்டுமே செய்வான். 
இது ஒரு ஸப்-ஸ்பெஷலைஸேஷன். பலவற்றைச் செய்து உலப்பிக் 
கொண்டிருக்க மாட்டான். அவன் செய்யும் அந்த மீகோரேங் அவனுக்கே 
உரியதாகவும் தனித்தன்மை பொருந்தியதாகவும் இருக்கும். நம்ம மதுரை 
வெங்கலக் கடைத் தெரு பாண்டியன் ஹோட்டல் புறா வறுவல், அம்சவல்லி பவன் பிரியாணி மாதிரி.
இன்னொரு ஸ்பெஷியாலிட்டி...... அவனவன் செய்யும் உண்டிகளுக்குத் தேவையான சேர்மானப் பொருட்களை மட்டுமே வைத்திருப்பான். ஒவ்வொரு நாளும் எத்தனை மீகோரேங் செலாவணி ஆகிறதோ, அதற்கேற்ற எண்ணிக்கை முட்டை, கீரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவற்றை வைத்திருப்பான். வெள்ளைப்பூண்டு உரிக்கப்பட்டு ஸைஸாக வெட்டப்பட்டிருக்கும். அதுபோலவே வெங்காயம், தோ·பூ என்னும் ஸோயா கேக் எல்லாமே. 
ஒரு குறிப்பிட்ட ஹாக்கர் மீ கோரேங், பீஹ¥ன் கோரேங், க்வெய்த்தியாவ் கோரேங் போடுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் எதை அதிகமாகச் செய்கிறானோ அந்த உண்டிக்கு உரிய சேர்மானக் கூட்டுப் பொருட்கள்தான் கைக்கு எட்டிய தூரத்தில் குறிப்பிட்ட இடங்களில் சுற்றிலும் இருக்கும். கண்ணை மூடிக்கொண்டு ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு பிடி, ஒவ்வொரு சிட்டிகை, ஒவ்வொரு கரண்டி... இப்படி எடுத்துப் போடமுடியும். எதையும் 
தடவிக்கொண்டோ தேடிக்கொண்டோ இருக்கமாட்டான்.
மிக விரைவாக அவனுக்கு வரும் ஆர்டர்களுக்கு உண்டிகளைச் செய்துகொடுத்துவிடுவான்.
Time Management, Efficient Service முதலியவற்றைத் தன்னகத்தே 
கொண்ட டெக்னிக்கைத்தான் நாங்கள் Chinese Hawker's Technic என்று 
குறிப்பிடுகிறோம். 
மலேசியாவில் உள்ள Management Training-இல் இதையும் சொல்லிக்
கொடுக்கிறார்கள்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Tuesday, June 25, 2013

MALAYSIAN HAZE

மலேசியப் புகை மூட்டம்  

சுமாத்ராத் தீவில் பல இடங்களில் காடுகளுக்குத் தீ வைத்திருக்கிறர்கள். பல இடங்களில் மிகப் பெரிய அளவில் தீ பரவிவிட்டது.  அணைக்க முடியாத அளவுக்கு அதிகரித்துவருகிறது. காட்டுத்தீயால் ஏற்படும் மிகுதியான அடர்த்தியான புகை, தென் மேற்கிலிருந்து வரும் பருவக்காற்றினால் மலாயாத் தீபகற்பத்தின் பல பாகங்களையும் மூடிவருகிறது. பெரிய மழை ஏதும் சமீபத்தில் இல்லை.  கீழ்க்கண்ட படங்களில் புகை மூட்டத்தின் கடுமையைக் காணலாம். 




புகை மூட்டத்தால் மூடப்பட்டிருக்கும் கோலாலும்ப்பூர். தூரத்தில் நடுவில் உயரமாகத் தெரிவதுதான் கோலாலும்பூரின் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம்.




இரண்டு படங்களும் ஸாட்டிலைட் படங்கள். சுமாத்ராவில் ஆங்காங்கு சிவப்பு நிறத்தில் காட்டுத் தீக்களையும் அவற்றிலிருந்து ஏற்பட்ட புகை தென்மேற்குப் பருவக்காற்றால் உந்தப்பட்டு மலாயாத் தீபகற்பத்தை மூடுவதையும் காட்டுகின்றன.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



Wednesday, June 19, 2013

HOW I GAVE HALVA




நான் அல்வாக் கொடுத்த கதை

        நான் அல்வாக் கொடுத்த கதை ஒன்று உண்டு.
ஆட்டோபையக்ரா·பி கேட்பவர்கள் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இதை ஏற்கனவே வேறொரு இழையில் அகத்தியரில் எழுதியுள்ளேன்.

இப்போது இன்னும் விரிவாக - அல்வாவுக்குக் கூடுதலாகப் பிசிபிசுப்பு 
ஏற்றி - எழுதியுள்ளேன்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நடந்த 
விஷயம்......

மதுரையில் மேல ஆவணிமூல வீதியில் சிறிய ஒட்டுக்கடை ஒன்று இஇருந்தது. அங்கு அல்வாதான் ஸ்பெஷல்.
மேலக் கோபுரத் தெரு முனங்கின் அருகில் 'பண்டாபீஸ்' என்று சொல்லப்பட்ட ஒரு நிறுவனம் இருந்தது. அங்கு ஒரு Gong எனப்படும் வெங்கலத் தட்டு ஒரு கம்பியில் கட்டப்பட்டு தொங்கும். மணிக்கு மணி ஒரு டவாலி சேவகர் அந்தத் தட்டில் ஓர் இரும்புக் கோலால் அடிப்பார். எத்தனை மணியோ அத்தனை தடவை அடிப்பார்.
அந்த மணியை 'பண்டாபீஸ் மணி' என்று குறிப்பிடுவார்கள்.
இப்போது ஆளடிக்கும் அந்த மணியெல்லாம் இருக்கமாட்டாது. அதற்கு அருகாமையில் மேலக் கோபுரத் தெருவில் தலையாட்டி பொம்மைக்கடை என்ற பொடிக்கடை இருந்தது. இப்போது அதெல்லாம் இல்லை என்று சொன்னார்கள். தெரு முக்கில் இருந்த பீமபுஷ்டி அல்வா விற்கப்படும் தள்ளுவண்டி இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.
அல்வாக் கடைக்குப் போவோம்.
பண்டாபீஸ் இருந்த வரிசையிலேயே அந்தக் கடையும் இருந்தது.
மிகவும் பருமனான ஐயர் ஒருவரின் கடை அது. 'மணியய்யர் கடை' என்று சொல்வார்கள்.
ஒரிஜினல் நாகப்பட்டினம் நெய் மிட்டாய்க்கடை அதே ஏரியாவில் 
அடுத்த தெருவாகிய மேலச்சித்திரை வீதியில் இருந்தது. அதற்கு மிக 
அருகாமையிலே அந்த ஐயர் அல்வாக்கடை வைத்திருந்தார்.
'ஒரிஜினலுக்கே அல்வாக் கொடுத்தவர்' என்றால் அவர்தான்.
கிட்டத்தட்ட நரசு'ஸ் காப்பி சின்னத்தில் வருவாரே, ஓர் அய்யங்கார்? 
அந்த மாதிரி இஇருப்பார். ஆனால் க்ரூ-கட் நரை முடி; பனியன் போட்டிருப்பார்; வேட்டியைத் தட்டுச்சுற்றாக அணிந்திருப்பார்.
அங்கு எப்போதும் நாட்டுப் பழங்கள் சீப்புச் சீப்பாகத் தொங்கிக் 
கொண்டிருக்கும். ஒரு சிறிய வேம்பாவில் பசும்பால் கொதித்தவண்ணம் 
இருக்கும். அந்த பால் வேம்பா மிகவும் பளபளவென்று இருக்கும். அதில் முப்பட்டையாக விபூதி பூசியிருப்பார். சந்தனக் குங்குமமும் 
அணிவித்திருப்பார். டபரா டம்ளர்கள். அவையும் பளபளவென்று மின்னும். எல்லாமே பித்தளை. எவர்சில்வர் கிடையாது. அந்தப் பாலின் ருசியே தனி. மணமிகுந்தது. நன்றாகக் காய்ச்சப்பட்டு விளங்கியது. 
அந்தக் கடையில் அல்வா எப்போதும் தயார் நிலையில் இஇருக்கும்.
தனித் தன்மை வாய்ந்த அல்வா.
ஒவ்வொரு நாளும் ஒஇருமுறை அந்த அல்வாவைத் தயாரிப்பதாகச் சொன்னார்.
அந்த அல்வா கொழக்கொழவென்று நெய் சொட்டச் சொட்ட, கருமை 
நிறத்தில் இஇருக்கும். வாயில் போட்டால் நாக்கு மேலன்னம் ஆகிய இஇடங்களில் ஒட்டும். மெதுவாகச் சப்பிச் சுவைத்துச் சாப்பிடவேண்டும். வேகமாகச் சாப்பிட்டால் தொண்டையில் ஒட்டிக்கொள்ளும். விழுங்குவதில் சிரமம் ஏற்படும்.
         ஆனால் அந்த ருசி, தேவலோக சம்பந்தமான ருசி.



ஜாதிக்காய், ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு ஆகியவை 
அல்வாவில் சேர்ந்திருப்பதை உணரமுடிந்தது. வேறு ஏதேனும் - கொக்காக் 
கோலா, கேயெ·ப்ஸீ மாதிரி - ஸீக்ரட் ரெஸிப்பி இருந்ததா என்பது 
தெரியவில்லை. இருந்திருக்கும். இருந்திருக்கவேண்டும். ஏனென்றால் 
மதுரையிலோ வேறு எங்குமோ அந்த மாதிரி அல்வாவைக் கண்டதில்லை. 
உண்டதில்லை. ஆகவே விண்டதில்லை.

மருத்துவக் கல்வியின்போது முதலாவது கிளினிக்கல் ஆண்டில் க்ஷயரோக மருத்துவமனையில் ஒருமாத காலம் பயிற்சி இஇருக்கும். அந்தத் துறையின் 
பேராசிரியராக டாக்டர் கதிரேசன் இருந்தார்.
தினமும் காலையில் மண்டை ஓட்டு பஸ்ஸில் மதுரையிலிருந்து பதினான்கு மைல் தூரத்தில் உள்ள ஊருக்குச் செல்லவேண்டும். திருப்பரங்குன்றம் தாண்டி அந்த ஊர்.
அதென்ன மண்டை ஓட்டு பஸ்?
மதுரை மருத்துவக் கல்லூரியின் காலேஜ் பஸ்.
அந்த நீலநிற பஸ் தனது முகப்பில் மேல்புறத்தில் இருந்த போர்டில்  
மண்டை ஓடு - கபாலமும் இஇரண்டு குறுக்கெலும்புகளும் போட்டிருக்கும். பழங்கால கடற்கொள்ளைக்காரர்கள் கட்டியிருப்பார்களே Jolly Roger கொடி, அது போல. காபாலிக பஸ். அதனை மதுரைக்காரர்கள் 'மண்டை ஓட்டு பஸ்' என்று அழைப்பார்கள்.
போகும்போதும் வரும்போதும் கூச்சல் போட்டுக்கொண்டு கண்டதனமாகப் பாட்டு பாடிக்கொண்டே வருவதால் மதுரைக் காரர்களுக்கு அந்த பஸ்ஸைக் கண்டால் அலர்ஜி.
அதான் அப்படியெல்லாம் பெயரிட்டார்கள். 
இஇப்போதும் அந்த பஸ் இஇருக்கா, என்ன? கிழண்டு போயிருக்குமே?
மருத்துவ மாணவர்களாக இருக்கும்போது பல மாணவர்கள் ரொம்பவும் ஜாலியாகவும் கலாட்டா செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
டாக்டர்கள் ஆனபிறகு அவர்களுடைய ஜாலிநெஸ், கலாட்டாத் தன்மை, ஹாஸ்ய உணர்ச்சி, சிரிப்பு எல்லாமே போய்விடுகிறது. அவர்களாகவே அப்படி அவற்றையெல்லாம் மறக்கிறார்களா, மறைக்கிறார்களா, அல்லது அடியோடு அழித்துக் கொள்கிறார்களா என்பது பட்டிமன்றத்துக்கு உரிய விஷயம். சாலமர் பாப்பய்யர், லியோனி ஆகியோர் பேசித் தீர்க்கவேண்டிய விஷயம். (வயசான ஆசாமி. அவரைக் கொஞ்சம் மரியாதையாக அழைக்கவேண்டியதாக இருந்தது. அதான் 'சாலமர் பாப்பய்யர்'). 
ஆனால் சில டாக்டர்கள் தங்களுடைய கொனஷ்டை, குசும்பு, கிருது 
ஆகியவற்றை விடுவதில்லை.
அதான் பார்க்கிறீர்களே.

டீபீ ஸானட்டோரியத்தில் பத்துமணி சுமாருக்கு டீட்டைம் என்னும்
இஇடைவேளை உண்டு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாணவர்/மாணவி ஏதாவது தின்பண்டம் கொண்டு வரவேண்டும்.
என்னுடைய முறை வரும்போது 'மேலாவணி மூலவீதி ஸ்பெஷல்' என்று சொல்லி அந்த அல்வாவைக் கொண்டுவந்து கொடுத்தேன்.
அனைத்து மாணவ மாணவிகளும் பேச்சற்றுத் திக்குமுக்காடிப் போயினர். நாக்கு, மேலன்னம், தொண்டைக்குழி எங்கணும் அல்வா.
'கையில் ஓர் பாதி; தொண்டையில் மீதி' என்ற மாதிரியில் அவர்கள் 
திணறியது....!
'அல்வாதானே. விழுவிழுவென்று வழுக்கிக்கொண்டு இஇறங்குமே' என்ற அவசரத்தில் விழுங்கியதால் அந்தப் பாடு.
"ஏன்வே, பாரதி. இன்னோரு தரம் கொண்டாந்தியனாக்கே கீழ, தரயிலயும் தடவிவெய்யும்வேய்! நிக்காம்போல ஒட்டிக்குவம். ஓடமுடியாதுவேய். இன்னோனும்வேய். தாள்ல தடவி வெச்சு விப்பம். காலரா கபே மார்ரி எடத்துல இஇருக்கும் ஈயெல்லாம் ஒட்டிக்கும். நல்லாப் பணம் பண்ணலாம்வேய்".
ஒரே ஒரு மிஸ்டேக். 
மேலாவணிமூல வீதியில் அனல் அடுப்பின்மேல் சிறிய அண்டாவில் 
சுடச்சுட இருந்த அல்வா, உருகி வழியும் நெய்யோடு, 'விழுவிழு'வென்று 
தொண்டையில் இறங்கிவிடும்.
வாங்கி இத்தனை மணி நேரம் கழித்து, என்னென்ன ஆர்கானிக் 
கெமிக்கல், பையோக் கெமிக்கல் மாற்றங்களுக்கு ஆளாகியதோ. அதான் 
அந்தப் பிசிபிசுப்பு.
இதான் 'நான் கொடுத்த அல்வா' கதை,

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$4



YAB AND YUM


Friday, June 7, 2013

COPY-CAT


காப்பிப் பூனை

பெரிய மனிதர்களைப் பார்த்து அவர்களை Ape செய்வது சர்வ
சாதாரணமாகக் காணப்படுவது. அவர்களுடன் சேர்வது, அவர்களுடன் 
தொடர்பு இருப்பதுபோல காட்டிக்கொள்வது முதலியவை, வலியக்கப் போய் ஒட்டிக்கொள்வது, பேசுவது போன்ற பழக்கங்கள் பலருக்கு இருக்கும். 
 இதை சுஜாதா 'Association with the Famous' என்று சொல்வார். 
அவருடன் வலிந்து பேசவோ, பழகவோ பலர் முயல்வதைத்தான் அவர் 
அப்படிச் சொல்லியிருக்கிறார். 
 பாவம். அவருடைய உண்மையான Fanகள்கூட சகட்டுமேனிக்கு 
இப்படி அவமானப்படவேண்டியிருக்கிறது. எல்லாருக்குமே அந்த 
அவச்சொல்தானே.

 கூலிட்ஜ் என்பவர் யூஎஸ்ஸின் ஜனாதிபதியாக இருந்தவர். 
 அவருடைய ஊர் ஆட்களை ஒருமுறை வெள்ளை மாளிகைக்கு 
அழைத்திருந்தார். விருந்து கொடுத்தார். 
 பெரிய மனுஷாளுஹளுடன் சாப்பிடும்போது Table Manners 
என்பனவற்றைக் கடைபிடிக்கவேண்டியிருக்கும். 
 எப்படி உட்காரவேண்டும்; நேப்கின்னை எப்படிக் கழுத்தில் கட்டிக்
கொள்ளவேண்டும், எந்த நேப்கின்னை மடியில் போட்டுக்கொள்ளவேண்டும். 
எதை முதலில் எப்படி சாப்பிடவேண்டும் என்று ஆயிரத்தெட்டு ஆசாரங்கள் இருக்கும். 
 கூலிட்ஜின் ஊர்க்காரர்கள் 'எதற்கு வம்பு' என்று எண்ணிக்கொண்டு 
சாப்பிடும்போது கூலிட்ஜ் என்னவெல்லாம் செய்கிறாரோ அதையெல்லாம் 
அப்படி அப்படியே செய்யத் தீர்மானித்தனர். 

 அப்படியே சாப்பாடு நடந்துகொண்டிருந்தது. 
 காப்பி சாப்பிடும்வரை எல்லாம் ஓக்கே. 
 கூலிட்ஜ் பால் கூஜாவை எடுத்தார். எல்லாரும் பால்கூஜாவை எடுத்தனர். 
கப்பில் பாலை ஊற்றினார். அனைவரும் கப்பில் பாலை ஊற்றினர். 
 கப்பை எடுத்தார். அனைவரும் கப்பை எடுத்தனர். 
 ஸாஸரில் கப்பிலிருந்து பாலை ஊற்றினார். அனைவரும் ஸாஸரில் பாலை ஊற்றினர். 
 ஸாஸரைக் கையில் எடுத்தார். அனைவரும் எடுத்தனர். 
 So far so good.
 கீழே குனிந்தார். தரையில் ஸாஸரை வைத்தார்.
 அவருடைய செல்லப்பூனை அங்கிருந்தது. 
 அது ஸாஸரிலிருந்த பாலைக் குடிக்கலாயிற்று.....

 Aping Technic எப்போதும் வேலை செய்யாது. 
 அதுசரி!
 உங்களில் யாருக்காவது 'காப்பி அடிக்கும் குரங்கு' கதை தெரியுமா?

Tuesday, June 4, 2013

HINDUISM - PAST, PRESENT, FUTURE



 இந்து சமயம் - நேற்று, இன்று, நாளை
துறை: வருங்காலவியல் 
நிகழ்வு: 1990-1991



$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

HINDUISM-PAST PRESENT AND FUTURE



'இந்து சமயம் - நேற்று இன்று நாளை' 
பேருரை 
வருங்காலவியல் துறை 
நிகழ்வு 1994-ஆம் ஆண்டு


Friday, May 31, 2013

SOMETHING LOST


          ஏதோ தொலைந்துவிட்டது


ஒரு காலத்தில் "எப்படா குமுதம் பத்திரிக்கை வரும்? 'யவனராணி' படிக்கலாம்? என்ற ஆவலோடு காத்திருந்ததுண்டு. அதைப் படித்துவிட்டு மருத்துவக் கல்லூரியில் அதைப் பற்றி ஒவ்வொரு வாரமும் டிஸ்கஷன் வைத்துப் பேசிக்கொண்டிருப்போம்.  கிட்டத்தட்ட 40 % மாணவர்கள் படித்திருப்பார்கள். 
அரட்டைகளின் மையக்கருத்துக்களில் ஒன்றாக யவனராணி விளங்கியது. பொதுவாகவே சாண்டில்யன் கதைகளை இளைஞர்கள் மிகவும் விரும்பிப் படிப்பார்கள். For obvious reasons. 
அந்தக் காலத்தில் குமுதம் வியாழன், வெள்ளி, ஏதோ ஒரு நாளில் வெளிவரும். வார இறுதிக்குச் சரியாக இருக்கும். 
ஆனால் யார் அந்த மாதிரி காத்திருந்தார்? உடனேயே  படித்து விட்டுத்தான் மறுவேலை. 
நோட்ஸ¤க்குள் வைத்துக்கொண்டு பேத்தாலஜி லெக்சர் கிலாஸில் வைத்துப் படிப்பவர்கள் இருந்தார்கள். 
குமுதம், ஆனந்தவிகடன் படிப்பதற்கென்று சில பாடங்களின் லெக்சர் கிலாஸ்கள் இருந்தன. 
மதுரை மருத்துக் கல்லூரி லெக்சர் ரூம்கள் ஒரு வசதியைக்
கொண்டிருந்தன. படிப்படியாக உயரமாக அதன் டெஸ்க் இருக்கைகள் 
அமைந்திருக்கும். கடைசி டெஸ்க் தூரத்தில் இருக்கும். அதன் அருகே இன்னொரு கதவு இருக்கும். அது எப்போதும் திறந்தே கிடக்கும். யாராவது கதவைக் கழற்றி விட்டிருப்பார்கள்.
"அல்ல்ல்ல்ல்..... வெவரமான பயடா நீ......!" என்று அந்தக் காலத்து மதுரை மருத்துவக் கல்லூரி குழூஉக்குறியில் பாராட்டப்பட்ட எவனாவது 'வெவரமான பய' அந்தத் தர்மக் கைங்கர்யத்தைச் செய்திருப்பான். 
குமுதம் படிப்போர் சங்கம் எப்போதும் அந்தக் கடைசி டெஸ்க்கின் நடுப்பகுதியில் அமர்ந்திருக்கும். ஓடிப்போவோர் சங்கம் டெஸ்க்கின் ஓரங்களில் இருக்கும். 
"ஏம்ம்ப்பூஊ..... இப்ப்டி மறச்சு மறச்சு வச்சு யவனராணியப் படிக்கிறியே....  அதோட த்ரில் விட்டுப் போயிராதோ?" என்று கேட்டால்.......
"தோ பார். அதுலதான் திரில்லே இருக்குல்ல. கையில பென்ஸில வச்சுக்கிட்டு அதோட மேல் நுனிய மட்டும் அசயிற மாரி சுத்திக்கிட்டே குமுதத்தப் படிப்பம்ல. எவனும் கண்டுக்க மாட்டான்ல. நாம சொல்றத ரொம்ப ஸீரியஸா எழுதிக்கிட்ருக்கான்னுட்டு நெனப்பாங்க்யல்ல. ரொம்ப சொங்கிஹதான் மாட்டுவாங்க்ய". 
இப்போதும் இந்த வயதில் அதே யவனராணியை அதே வேகத்தோடு அவசரத்தோடு ஆர்வத்தோடு ஈடுபாட்டோடு படிக்கமுடியுமா? 
முடியாதுதான்.
ஏதோ தொலைந்துவிட்டது.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Friday, May 17, 2013

MUHAIYADDIN AANDAVAR



முஹையத்தீன் ஆண்டவர் 

(சில குறிப்புகள்)


இஸ்லாமிய சமயத்தில் ஸூஃபி மார்க்கத்தில் சில பாதைகள் உள்ளன. இந்தப் பாதைகளை 'தரீக்கத்' என்பார்கள்.

முஹையத்தீன் ஆண்டவர் தற்காலத்து ஈராக் நாட்டின் ஜிலான் என்னும் இடத்தில் கிபி 1077-இல் தோன்றியவர்.

இவர் தமிழர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். தமிழ் இலக்கியத்தில்
நிறைய இடம் பிடித்திருப்பவர்.

இவரைத்தான் முஹைதீன் ஆண்டவர் என்று தமிழர்கள் அழைப்பார்கள்.

அவருடைய தர்கா பழனியில் இருக்கிறது. பழனியாண்டவர்
கோயிலுக்குள்.

அவருடைய முழுப்பெயர்  ஷேய்க் முஹ்யிதீன் அப்துல் காதிர்
அல் ஜிலானி அல் ஹஸானி அல் ஹ¤ஸேய்னி என்பது. முஹம்மது நபிகள்(சல்) அவர்களின் நேரடி வாரிசு என்பதால் அல் ஹஸானி அல்
ஹ¤ஸேய்னி என்ற பெயர்கள்.

பதினெட்டு வயதாகும்போது அக்காலத்து உலகின் மிகச் சிறந்த
மாநகரங்களுள் ஒன்றான பாக்தாத் நகருக்குச் சென்று அங்கிருந்த
உலகின் சிறந்த ஆசிரியர்கள் சிலரிடம் பயின்றார். இஸ்லாமின் பல
சித்தாந்த்தங்களையும் ஆசார அனுஷ்டானங்களையும் ஓர் ஆசிரியரிடமும்
இஸ்லாமிய ஞானமார்க்கத்தை இன்னொரு ஆசிரியரிடம் கற்றார்.

அதன் பிறகு ஈராக்கின் பாலைவனப் பகுதிகளில் இருபத்தைந்தாண்டு
அலைந்து திரிந்தார். ஐம்பது வயதுக்குமேல் பாக்தாத் நகரத்துக்குத்
திரும்பினார். அங்கு அவர் மக்களுக்கு உபதேசித்தார். அவருடைய
ஆசிரியரின் மத்ராஸா கல்லூரியிலேயே அவருடைய போதனைகள் நடந்தன.

அப்போது உலக மையங்களில் பாக்தாத் நகரம் முதன்மையாக
இருந்தது. கிழக்கு நாடுகளும் மேற்கு நாடுகளும் வடதிசை தென் திசை
நாடுகளும் கூடும் முக்கிய கேந்திரமாக விளங்கியது.

அப்போதைய அரபு உலகின் தலைநகரமாகவும் இருந்தது.
இஸ்லாமின் தலைமைத்துவமும் பேரரசர் அந்தஸ்தும் பெற்ற கலீ·பா
இருக்கும் இடம்.

தமிழ்நாட்டுக்கும் ஈராக்குக்கும் மிக நெருங்கிய தொடர்புகள்
எப்போதுமே இருந்துவந்தன.
ஈராக்கின் பழைய தமிழ்ப் பெயர் 'வச்சிரநாடு'. பாக்தாத் நகரை
தமிழர்கள் 'வகுதாபுரி' என்றழைத்தனர். அதனுடைய சாயலாக தமிழகத்துக்கு
வரப்போக இருந்து, அங்கேயே குடியேறிய அராபியத் தமிழர்கள்
கீழைக்கரையை 'வகுதாபுரி' என்றும் அது இருந்த பிரதேசத்தை
'வச்சிர நாடு' என்றும் அழைத்தனர். பாண்டியர்களின் கல்வெட்டுக்களில்
அது 'பௌத்திரமாணிக்க பட்டினம்' என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஹிஜ்ரி 3-ஆம் ஆண்டிலேயே கீழைக்கரையில் மசூதி கட்டி
யிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வளவு நெருக்கமான
தொடர்பு இருந்தது.
ஆயுளின் கடைசிவரைக்கும் அவர் தம்முடைய போதனைகளைச்
செய்துவந்தார். சில அரிய நூல்களும் எழுதியிருக்கிறார்.
ஸ¥·பி மார்க்கத்திற்கும் நடைமுறை இஸ்லாம் மார்க்கத்துக்கும்
ஒருங்கே பேராசியராக இருப்பவர் ஷேய்க் அப்துல் காதிர் ஜிலானி.
அவர் எழுதிய நூல்களில் பிரபலமாக விளங்குவது '·புத்தூஹ் அல் காய்ப்'
எனப்படும். நாற்பது பகுதிகளாக விளங்கும் நூல்.
அவர் தோற்றுவித்த ஸ¥·பி பாதை 'காதிரியா' எனப்படும்.
ஸ¥·பி மார்க்கத்தின் முதல் தரீக்கத்-ஆக அமைந்திருப்பது காதிரியா.
இதைச் சேர்ந்த பீர்களும் பக்கிரிகளும் தமிழ்நாட்டுக்கு வந்தனர். அவ்ருடைய மகன்களில் பத்துப்பேர் இந்தியாவுக்கு வந்து மார்க்கத்தைப் பரப்பினர். அவர்களில் சிலர் தமிழகத்தில் இருந்தார்கள்.
இந்தியாவில் அவர்கள் காதிரியா இயக்கத்தை ஏற்படுத்திப் பரப்பினர்.
ஆயிரக்கணக்கானவர் அதனால் பயன்பெற்றனர். மதவேறுபாடு காட்டாமல்
இந்துக்கள் முஸ்லிம்கள் அனைவரிடமும் அன்பு காட்டி, அறவழியில்
சென்றனர்.
அவர் முதிய வயதுவரைக்கும் இருந்து பாக்தாத் நகரத்தில் சமாதி அடைந்தார்.
அவர்பேரில் அன்பும் பெருமதிப்பும் வைத்திருந்த தமிழர்கள்
அவரைப் பழனி மலையிலும் இருப்பதாக பாவித்து அங்கு இந்துக்கள்,
முஸ்லிம்கள் இரு சாராரும் கொண்டாடும் நிலையில் இருக்கிறார்.

முஹைய்தீன் ஆண்டவர் என்று தமிழர்கள் அவரை அழைப்பார்கள்.

அவர் பெயரால் முஹைய்தீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ், திருப்புகழ்
போன்ற பல நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.
ஆன்மீகத்திலும் கஷ்டத்திலும் தம்மை நினைத்தால் வெள்ளைக்
குதிரையில் ஏறி கடும்வேகத்தில் தாம் வந்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார்.

Monday, May 13, 2013

CULT AND OCCULT

NOTES ON THE BOOK 'CULT AND OCCULT'

THE BOOKS CONTENTS


THE INTRODUCTION TO THE BOOK 







Monday, May 6, 2013

'EKAKSHARA VERSE'


அருணகிரிநாதர் பாடிய 

கந்தர் அந்தாதி 

ஏகாட்சர தகர வர்க்கப் பாடல்






$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$