Sunday, April 15, 2012

MANTHRA VIBHUTHI


மந்திரமாவது நீறு

சைவத்திருமுறைகளுக்கு அதீத அமானுஷ்ய ஆற்றல்கள் இருக்கின்றன.
தேவாரத் திருப்பதிகங்களுக்கு ஆற்றல்கள் உண்டு. அருள்மிகு திருப்பதிகங்கள், வேண்டுகோள் திருப்பதிகங்கள் போன்றவை நம்பிக்கையுடன் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றில் ஒன்று திருநீற்றுத் திருப்பதிகம். திருவாலவாய் என்னும் மதுரையில் திருஞானசம்பந்தத்தால் பாடப்பட்டது.
இந்தப் பதிகத்தைத் திருஞானசம்பந்தர் பாடி, திருநீற்றை நின்ற சீர் நெடுமாற பாண்டியரின்மீது இட்டு அவருடைய வெப்பு நோயை நீக்கினார்.
மலேசியாவில் சிவனடியார் முருகையக் கண்ணனார் தன் பூஜை அறையில் திருநீற்றைத் தாம்பாளம் ஒன்றில் வைத்து அதன் மீது கையை வைத்து திருநீற்றுத் திருப்பதிகத்தை ஓதி உருவேற்றி வைத்திருக்கிறார்.
தேவையுள்ளவர்களுக்கு இந்தத் திருநீற்றை எடுத்துப் பூசிவிடுகிறார்.
பல மாதங்களாக இவ்வாறு ஓதி உருவேற்றிச் சேர்த்த திருநீற்றுக் குவியலையும் படத்தில் காணலாம்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

1 comment:

  1. sir is there anything in english mantra? i am unable to read tamil

    ReplyDelete