Wednesday, June 19, 2013

HOW I GAVE HALVA




நான் அல்வாக் கொடுத்த கதை

        நான் அல்வாக் கொடுத்த கதை ஒன்று உண்டு.
ஆட்டோபையக்ரா·பி கேட்பவர்கள் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இதை ஏற்கனவே வேறொரு இழையில் அகத்தியரில் எழுதியுள்ளேன்.

இப்போது இன்னும் விரிவாக - அல்வாவுக்குக் கூடுதலாகப் பிசிபிசுப்பு 
ஏற்றி - எழுதியுள்ளேன்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நடந்த 
விஷயம்......

மதுரையில் மேல ஆவணிமூல வீதியில் சிறிய ஒட்டுக்கடை ஒன்று இஇருந்தது. அங்கு அல்வாதான் ஸ்பெஷல்.
மேலக் கோபுரத் தெரு முனங்கின் அருகில் 'பண்டாபீஸ்' என்று சொல்லப்பட்ட ஒரு நிறுவனம் இருந்தது. அங்கு ஒரு Gong எனப்படும் வெங்கலத் தட்டு ஒரு கம்பியில் கட்டப்பட்டு தொங்கும். மணிக்கு மணி ஒரு டவாலி சேவகர் அந்தத் தட்டில் ஓர் இரும்புக் கோலால் அடிப்பார். எத்தனை மணியோ அத்தனை தடவை அடிப்பார்.
அந்த மணியை 'பண்டாபீஸ் மணி' என்று குறிப்பிடுவார்கள்.
இப்போது ஆளடிக்கும் அந்த மணியெல்லாம் இருக்கமாட்டாது. அதற்கு அருகாமையில் மேலக் கோபுரத் தெருவில் தலையாட்டி பொம்மைக்கடை என்ற பொடிக்கடை இருந்தது. இப்போது அதெல்லாம் இல்லை என்று சொன்னார்கள். தெரு முக்கில் இருந்த பீமபுஷ்டி அல்வா விற்கப்படும் தள்ளுவண்டி இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.
அல்வாக் கடைக்குப் போவோம்.
பண்டாபீஸ் இருந்த வரிசையிலேயே அந்தக் கடையும் இருந்தது.
மிகவும் பருமனான ஐயர் ஒருவரின் கடை அது. 'மணியய்யர் கடை' என்று சொல்வார்கள்.
ஒரிஜினல் நாகப்பட்டினம் நெய் மிட்டாய்க்கடை அதே ஏரியாவில் 
அடுத்த தெருவாகிய மேலச்சித்திரை வீதியில் இருந்தது. அதற்கு மிக 
அருகாமையிலே அந்த ஐயர் அல்வாக்கடை வைத்திருந்தார்.
'ஒரிஜினலுக்கே அல்வாக் கொடுத்தவர்' என்றால் அவர்தான்.
கிட்டத்தட்ட நரசு'ஸ் காப்பி சின்னத்தில் வருவாரே, ஓர் அய்யங்கார்? 
அந்த மாதிரி இஇருப்பார். ஆனால் க்ரூ-கட் நரை முடி; பனியன் போட்டிருப்பார்; வேட்டியைத் தட்டுச்சுற்றாக அணிந்திருப்பார்.
அங்கு எப்போதும் நாட்டுப் பழங்கள் சீப்புச் சீப்பாகத் தொங்கிக் 
கொண்டிருக்கும். ஒரு சிறிய வேம்பாவில் பசும்பால் கொதித்தவண்ணம் 
இருக்கும். அந்த பால் வேம்பா மிகவும் பளபளவென்று இருக்கும். அதில் முப்பட்டையாக விபூதி பூசியிருப்பார். சந்தனக் குங்குமமும் 
அணிவித்திருப்பார். டபரா டம்ளர்கள். அவையும் பளபளவென்று மின்னும். எல்லாமே பித்தளை. எவர்சில்வர் கிடையாது. அந்தப் பாலின் ருசியே தனி. மணமிகுந்தது. நன்றாகக் காய்ச்சப்பட்டு விளங்கியது. 
அந்தக் கடையில் அல்வா எப்போதும் தயார் நிலையில் இஇருக்கும்.
தனித் தன்மை வாய்ந்த அல்வா.
ஒவ்வொரு நாளும் ஒஇருமுறை அந்த அல்வாவைத் தயாரிப்பதாகச் சொன்னார்.
அந்த அல்வா கொழக்கொழவென்று நெய் சொட்டச் சொட்ட, கருமை 
நிறத்தில் இஇருக்கும். வாயில் போட்டால் நாக்கு மேலன்னம் ஆகிய இஇடங்களில் ஒட்டும். மெதுவாகச் சப்பிச் சுவைத்துச் சாப்பிடவேண்டும். வேகமாகச் சாப்பிட்டால் தொண்டையில் ஒட்டிக்கொள்ளும். விழுங்குவதில் சிரமம் ஏற்படும்.
         ஆனால் அந்த ருசி, தேவலோக சம்பந்தமான ருசி.



ஜாதிக்காய், ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு ஆகியவை 
அல்வாவில் சேர்ந்திருப்பதை உணரமுடிந்தது. வேறு ஏதேனும் - கொக்காக் 
கோலா, கேயெ·ப்ஸீ மாதிரி - ஸீக்ரட் ரெஸிப்பி இருந்ததா என்பது 
தெரியவில்லை. இருந்திருக்கும். இருந்திருக்கவேண்டும். ஏனென்றால் 
மதுரையிலோ வேறு எங்குமோ அந்த மாதிரி அல்வாவைக் கண்டதில்லை. 
உண்டதில்லை. ஆகவே விண்டதில்லை.

மருத்துவக் கல்வியின்போது முதலாவது கிளினிக்கல் ஆண்டில் க்ஷயரோக மருத்துவமனையில் ஒருமாத காலம் பயிற்சி இஇருக்கும். அந்தத் துறையின் 
பேராசிரியராக டாக்டர் கதிரேசன் இருந்தார்.
தினமும் காலையில் மண்டை ஓட்டு பஸ்ஸில் மதுரையிலிருந்து பதினான்கு மைல் தூரத்தில் உள்ள ஊருக்குச் செல்லவேண்டும். திருப்பரங்குன்றம் தாண்டி அந்த ஊர்.
அதென்ன மண்டை ஓட்டு பஸ்?
மதுரை மருத்துவக் கல்லூரியின் காலேஜ் பஸ்.
அந்த நீலநிற பஸ் தனது முகப்பில் மேல்புறத்தில் இருந்த போர்டில்  
மண்டை ஓடு - கபாலமும் இஇரண்டு குறுக்கெலும்புகளும் போட்டிருக்கும். பழங்கால கடற்கொள்ளைக்காரர்கள் கட்டியிருப்பார்களே Jolly Roger கொடி, அது போல. காபாலிக பஸ். அதனை மதுரைக்காரர்கள் 'மண்டை ஓட்டு பஸ்' என்று அழைப்பார்கள்.
போகும்போதும் வரும்போதும் கூச்சல் போட்டுக்கொண்டு கண்டதனமாகப் பாட்டு பாடிக்கொண்டே வருவதால் மதுரைக் காரர்களுக்கு அந்த பஸ்ஸைக் கண்டால் அலர்ஜி.
அதான் அப்படியெல்லாம் பெயரிட்டார்கள். 
இஇப்போதும் அந்த பஸ் இஇருக்கா, என்ன? கிழண்டு போயிருக்குமே?
மருத்துவ மாணவர்களாக இருக்கும்போது பல மாணவர்கள் ரொம்பவும் ஜாலியாகவும் கலாட்டா செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
டாக்டர்கள் ஆனபிறகு அவர்களுடைய ஜாலிநெஸ், கலாட்டாத் தன்மை, ஹாஸ்ய உணர்ச்சி, சிரிப்பு எல்லாமே போய்விடுகிறது. அவர்களாகவே அப்படி அவற்றையெல்லாம் மறக்கிறார்களா, மறைக்கிறார்களா, அல்லது அடியோடு அழித்துக் கொள்கிறார்களா என்பது பட்டிமன்றத்துக்கு உரிய விஷயம். சாலமர் பாப்பய்யர், லியோனி ஆகியோர் பேசித் தீர்க்கவேண்டிய விஷயம். (வயசான ஆசாமி. அவரைக் கொஞ்சம் மரியாதையாக அழைக்கவேண்டியதாக இருந்தது. அதான் 'சாலமர் பாப்பய்யர்'). 
ஆனால் சில டாக்டர்கள் தங்களுடைய கொனஷ்டை, குசும்பு, கிருது 
ஆகியவற்றை விடுவதில்லை.
அதான் பார்க்கிறீர்களே.

டீபீ ஸானட்டோரியத்தில் பத்துமணி சுமாருக்கு டீட்டைம் என்னும்
இஇடைவேளை உண்டு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாணவர்/மாணவி ஏதாவது தின்பண்டம் கொண்டு வரவேண்டும்.
என்னுடைய முறை வரும்போது 'மேலாவணி மூலவீதி ஸ்பெஷல்' என்று சொல்லி அந்த அல்வாவைக் கொண்டுவந்து கொடுத்தேன்.
அனைத்து மாணவ மாணவிகளும் பேச்சற்றுத் திக்குமுக்காடிப் போயினர். நாக்கு, மேலன்னம், தொண்டைக்குழி எங்கணும் அல்வா.
'கையில் ஓர் பாதி; தொண்டையில் மீதி' என்ற மாதிரியில் அவர்கள் 
திணறியது....!
'அல்வாதானே. விழுவிழுவென்று வழுக்கிக்கொண்டு இஇறங்குமே' என்ற அவசரத்தில் விழுங்கியதால் அந்தப் பாடு.
"ஏன்வே, பாரதி. இன்னோரு தரம் கொண்டாந்தியனாக்கே கீழ, தரயிலயும் தடவிவெய்யும்வேய்! நிக்காம்போல ஒட்டிக்குவம். ஓடமுடியாதுவேய். இன்னோனும்வேய். தாள்ல தடவி வெச்சு விப்பம். காலரா கபே மார்ரி எடத்துல இஇருக்கும் ஈயெல்லாம் ஒட்டிக்கும். நல்லாப் பணம் பண்ணலாம்வேய்".
ஒரே ஒரு மிஸ்டேக். 
மேலாவணிமூல வீதியில் அனல் அடுப்பின்மேல் சிறிய அண்டாவில் 
சுடச்சுட இருந்த அல்வா, உருகி வழியும் நெய்யோடு, 'விழுவிழு'வென்று 
தொண்டையில் இறங்கிவிடும்.
வாங்கி இத்தனை மணி நேரம் கழித்து, என்னென்ன ஆர்கானிக் 
கெமிக்கல், பையோக் கெமிக்கல் மாற்றங்களுக்கு ஆளாகியதோ. அதான் 
அந்தப் பிசிபிசுப்பு.
இதான் 'நான் கொடுத்த அல்வா' கதை,

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$4


1 comment:

  1. நீங்கள் குறிப்பிடும் ஐயங்கார் நாராயணா கா.பியில் வருவார்; நரசுஸ் இல்லையென்று நினைக்கிறேன்.

    ReplyDelete