Thursday, November 10, 2011

From Agathiyar-#2

இந்த இடத்தில் ஒரு சிறிய Break கொடுக்கவேண்டியுள்ளது.
முந்நூறு ஆண்டுகளில் ஐம்பத்தைந்து போர்களைச் செய்த பாண்டியர்களைப் பற்றி கொஞ்சம் சிந்திக்கவேண்டியுள்ளது.
சராசரியாகப் பார்த்தால் 300/55 = 5 ஆண்டுகள் 5 மாதங்கள் 13 நாட்களுக்கு ஒரு முறை போர். 
:-)
இது சும்மா ஒரு கணக்குதான். 
பல சமயங்களில் அடுத்தடுத்து சண்டை கொடுத்திருப்பார்கள். சில சமயங்களில் ஒரு தலைமுறை பேசாமல் இருந்திருக்கலாம். 
"எலே மழவராயா...... பசங்க எல்லாங் கொஞ்சம் பெரிசாகட்டும். இப்பப் போய்யி அவனுஹள சண்டேலெ விட்டம்னாக்க, பயத்துலயே சாவானுவ. வேணும்னாக்க பல்லவங்க்ய வுடுற அம்புஹள 
வாங்கிக்யிறதுக்கு வேண்ணா அவனுஹள முன்னால வுடலாம். மத்தவடிக்கி இவனுவ பிரயோசனப் படம்மாட்டாங்க்ய..... என்ன சொல்லுறீரு?"
"ஆமாமுங்க மவராசா...... பதுனெட்டு வயசுன்னாக்கெ நல்ல பருவமுங்க. அதுக்கு நடுவுல 
வெலச்சல்லாம் சேத்து வெச்சுக்கலாம். கத்தி கித்தியெல்லாம் அடிச்சி கிடிச்சி வெச்சுறலாம். போன ரெண்டு தபா, கும்மோணத்துக் கோட்டயப் புடிக்க ஐயவித்துலாமெ அம்பது செஞ்சதுல அங்கிட்டு புறமலெ நாட்டுக் காடுஹள்லாமெ அழிஞ்சு போச்சு. இனிமே மரமெல்லாம் பெரிசாகனும். அம்பு அஞ்சு லெச்சம் வோணும். வில்லுஹ இருவதுனாயிரம் வோணும். அப்பறம் அந்த ஈட்டிஹ முப்பதுனாயிரம் 
வோணும்ல. மரமெல்லாமே வெட்டுப்பட்டுப் போச்சுங்களெ மவராசா. அதுங்கள்லாமெ இனிமெ வளரோணும்ல?"
இந்த மாதிரிதான் ஏதாவது ஒரு பாண்டிய மன்னர் அவருடைய முக்கிய படைத் தலைவரான 
ஏதாவது ஒரு மழவராயரிடம் சொல்லி அவரும் பதில் சொல்லியிருப்பார்.
Possibilities.

No comments:

Post a Comment