Monday, October 31, 2011

THE ART OF MONGANISATION (Agathiyar- 011111



TO:
Tuesday, November 1, 2011 8:36 AM

Message body

  அன்பர்களே,


இப்போது புழக்கத்தில் உள்ள சில மிகச் சாதாரண சொற்கள் பழங்காலத்தில் எந்த
அர்த்தத்தில் புழங்கிக்கொண்டிருந்தன என்பது ரொம்பவும் விசித்திரமாக இருக்கும்.
சில சொற்கள் கொஞ்சம்
கொஞ்சம் உருமாறியிருக்கும். சில சொற்கள் அப்படி அப்படியே இருக்கும்.
ஆனால் அர்த்தம்தான் ரொம்பவும் வேறுமாதிரியாக இருக்கும்.
ஏற்கனவே லகிடு, மொங்கான் என்ற சொற்களைப் பற்றி எழுதியிருக்கிறேன்.
மொங்கான் என்பது ஒரு வகையான பெரிய தவளை. குண்டாக இருக்கும். பெரிய தலை. பெரிய
கண்கள்.
ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்கும். அக்கம்பக்கத்தில் பெரும் பூச்சிகள்
வந்தால்
திடீரென்று வாயைத் திறக்கும். வாய்க்குள் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும்
நாக்கைத் திடீரென்று
'வ்லுக்'கென்று பூச்சியை நோக்கி நீட்டும். நாக்கில் பூச்சி ஒட்டிக்கொள்ளும்.
அப்படியே பூச்சியை
நாக்கால் வாரிச் சுருட்டி, நாக்கையும் பூச்சியையும் சேர்த்து வாய்க்குள்
திணித்துக்கொள்ளும். உடனேயே வாயை மூடிக்கொள்ளும். அதே வேகத்தில் பூச்சியை
அப்படியே விழுங்கிவிடும். 'க்லுபுக்'கென்று பூச்சி தொண்டைக்குள் இறங்கும். அதே
நேரத்தில் மொங்கானின் கண்கள்
பிதுங்கும்.
அவ்வளவுதான்.
மீண்டும் "ஓடும் பூச்சி ஓட, உறுபூச்சி வருமளவும் காத்தி"ருக்கும்.
எதுவுமே நடந்த மாதிரி இருக்காது.
கம்ப ராமாயணத்தில் ராமன் சிவதனுசுக்கு நாணேற்றிய மாதிரி, "எடுத்தது கண்டார்;
இற்றது கேட்டார்"தான்.
வாயைத் திறந்ததும் தெரியாது. பூச்சியைப் பிடித்ததும் தெரியாது. வாய்க்குள்
சுருட்டிப் போட்டுக்
கொண்டதும் தெரியாது. விழுங்கியதும் தெரியாது.
ஏதாவது பொருளையோ பணத்தையோ சொத்தையோ யாருக்கும் தெரியாமல் அபகரிப்பதை
'மொங்கான் போடுதல்' என்று சொல்லும் வழக்கு சிவகங்கை வட்டகையில் புழங்கியது.


அன்புடன்


ஜெயபாரதி

No comments:

Post a Comment