Friday, March 16, 2012

SKY-WATCH VIYAALZAN+VELLI-17-03-2012

அன்பர்களே,

இப்போதெல்லாம் மாலையில் சூரியன் மறைந்த பின்னர் இருட்டிய சமயத்தில் மேற்கு வானின்
கீழ்ப்பகுதியில் இரண்டு பிரகாசமான கிரகங்களைக் காணலாம்.
அதில் ரொம்பவும் பிரகாசமாக இருப்பது சுக்கிரன் என்னும் வெள்ளி. அதன் பக்கத்தில் இருக்கும் இன்னொரு பிரகாசமான கிரகம்தான் பிரஹஸ்பதி என்னும் வியாழன்.
சுக்கிரன், விடிவெள்ளி பற்றிய விபரங்கள் ஏற்கனவே அகத்திய ஆவணத்தில் இருக்கின்றன. 'தெற்கு ஓடிய வெள்ளி' என்ற இழையும் உண்டு.
Astronomy வானநூல்படி, இன்று சூரியன் மீனத்தில் 3 டிகிரி 15 மினிட்டில் இருக்கிறது. வியாழன் மேஷம் 16 டிகிரி 11 மினிட்டிலில் இருக்கிறது. சுக்கிரன் இப்போது மேஷத்தில் 18 டிகிரி 57 மினிட்டில் இருக்கிறது. வியாழன் சூரியனிலிருந்து 43 டிகிரி 26 மினிட் தூரம் விலகியுள்ளது. சுக்கிரன்
46 டிகிரி 12 மினிட் தள்ளியிருக்கிறது. சுக்கிரன் அதிக பட்சம் நாற்பத்தெட்டு டிகிரிதான் விலகி
யிருக்கமுடியும். அதற்கு மேல் போக முடியாது. நின்ற இடத்தில் நின்று, நிதானித்துவிட்டு, சூரியனை நோக்கி நெருங்கி வரும். சூரியனுக்கு மிக அருகில் வரும்போது சூரியனின் தகத் தகாயத்தால் கண்ணுக்குத் தெரியமாட்டாது. இந்த நிலையைத்தான் அஸ்தாங்கம் என்பார்கள். தற்சமயம் இன்னொரு
கிரகமான புதன் மீனம் 11 டிகிரியில் இருக்கிறது. அதாவது சூரியனிலிருந்து ஏழேமுக்கால் டிகிரிதான்
தள்ளியுள்ளது. இது புதனுக்கு அஸ்தாங்க நிலை. 'அஸ்தமனம்' என்றும் சாதாரணமாகச் சொல்வார்கள்.

சுக்கிரன் இவ்வளவு தள்ளியிருப்பதால்தான் இவ்வளவுக்கு பிரகாசமாகத் தெரிகிறது.
வெள்ளியை 'சுக்கிரன்' என்றும் சொல்வார்கள். சுக்கிரன் பிருகு முனிவரின் மகன். ஆகவே
பார்க்கவன் என்ற பெயரும் சுக்கிரனுக்கு உண்டு. ஸ்ரீயாகிய லட்சுமி வெவ்வேறு கல்பங்களில் வெவ்வேறு
இடங்களில் தோன்றியவள். ஒருமுறை அவள் பிருகு முனிவரின் மகளாகப் பிறந்தாள். ஆகவே
ஸ்ரீலட்சுமிக்கு 'பார்க்கவி' என்ற பெயருண்டு.
சிவனால் விழுங்கப்பட்டு வயிற்றிலிருந்து மீண்டு வெளியில் வந்ததால் வெள்ளை நிறம் ஏற்பட்டது. ஆகவே சுக்கிரன் என்ற பெயர். வெள்ளையானவன் வெள்ளி.
சுக்கிரனே ஸ்ரீலட்சுமிக்கு உரிய கிரகம். சுக்கிரனின் அதிதேவதை ஸ்ரீலட்சுமி. சுக்கிரனால்
பிரச்னைகள் இருந்தால் ஸ்ரீலட்சுமியை வழிபடச் சொல்வார்கள்.
வெள்ளி உலோகத்துக்கு வெள்ளி என்ற பெயர் ஏற்பட்டதும் சுக்கிரனால்தான். சுக்கிரனுக்கு உரிய உலோகமும் வெள்ளிதான். வெள்ளி வெள்ளையாக இருப்பதால் அந்தப் பெயர் என்றும் சொல்வார்கள்.
வெள்ளிக்கிழமைக்கு உரிய கிரகமும் சுக்கிரன்தான். சுக்கிர ஹோரையும் ரிஷபராசியும்
துலாராசியும் சுக்கிரனுடையவை.
ஸ்ரீலட்சுமியைப் பொன்மகள் என்று குறிப்பிடுவார்கள். அவள் வெள்ளிக்கும் உரியவள்தான்.

ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் ஸ¤வர்ண ரஜத் தஸ்ரஜாம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவ:

ஸ்ரீலட்சுமிக்குரிய ஸ்ரீஸ¥க்தத்தின் முதல் சுலோகம். இதல் வரும் 'ரஜத்' என்பது வெள்ளி.

கயிலை மலையை 'வெள்ளி மலை' என்றும் குறிப்பிடுகிறார்கள்.
ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் அம்பிகையின் வழிபாட்டில் முக்கியமானது. அதுபோலவே ஸ்ரீலலிதா
த்ரிஸதி என்னும் முன்னூறு மந்திரங்கள் கொண்ட வழிபாட்டு நூலும் முக்கியமானது. இவை இரண்டும்
நாமாவளி நூல்களில் பிரபலமானவை. ரொம்பவும் பிரபலமானது சஹஸ்ரநாமம்தான்.
இன்னொன்றும் இருக்கிறது. அதை 'கட்கமாலா' என்று அழைப்பார்கள். அதன் இன்னொரு
வடிவம் 'ஸஹஸ்ராக்ஷர வித்யா' எனப்படுவது.

இவை தவிர இன்னும் ஒரு நாமாவளி நூலும் உண்டு.
நூற்றெட்டு மந்திரங்கள் கொண்ட ஸ்ரீலலிதா அஷ்டோத்தரசத நாமாவளி. மிக அழகிய நூல்.
அர்த்த புஷ்டி என்பார்களே, அது பொருந்தியது. அந்த மந்திரங்களை சந்தத்தோடு பாடினால் மனம்
லயித்து எங்கோ சென்றுவிடும்.
அதன் முதல் மந்திரங்கள்:

ரஜதாசல ச்ருங்காக்ர மத்யஸ்தாயை நமோநம:
ஹிமாசல மஹாவம்ச பாவனாயை நமோநம:

இதில் வரும் ரஜத் அசலம் என்பது வெள்ளிமலை. ச்ருங்கம் என்பது கொம்பு. மலையின் உச்சிப்
பகுதியையும் குறிக்கும்.

அன்புடன்

ஜெயபாரதி

========================

No comments:

Post a Comment